அரசாங்கத்துடன் இணையும் சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவி இல்லை




ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை தாண்டி புதிய அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளும் அந்தக் கட்சியின் உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். 

அந்தக் கட்சியின் உறுப்பினர் சாந்த பண்டார இதனை கூறியுள்ளார். 

அரசாங்கத்துடன் இணையும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்காதிருக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்