லொறியுடன் புகையிரதம் மோதியதில்




குருணாகல், மெத்தேகம சந்தியில் புகையிரத கடவையில் இடம்பெற்ற விபத்தில் மூவர் பலத்த காயங்களுக்க உள்ளாகியுள்ளனர். 

வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்தில் லொறி ஒன்று மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

நேற்று (14) காலை 11 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் காயமடைந்த மூவரும் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்தில் லொறி பாரியளவில் சேதடைந்துள்ளதுடன் புகையிரதமும் சேதமடைந்துள்ளது.