துப்பாக்கிச் சூட்டில் ஒருவருக்கு காயம் -




சீதுவ, லியனகேமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தார். 

களியாட்ட நிகழ்வு இடம்பெறும் இடத்தில் இருந்த ஊழியர் ஒருவருக்கும் அங்கு வருகை தந்த நபருக்கும் இடையே ஏற்பட்ட முறுகல் நிலையே இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இச்சம்பவம் இன்று (19) அதிகாலை இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

காயமடைந்தவர் சீதுவ, ரத்கொலுகம பிரதேசத்தை சேர்ந்த 34 வயதானவர் என தெரிவிக்கப்படுகின்றது. 

களியாட்ட நிகழ்வு இடம்பெற்ற வளாக உரிமையாளரே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரை கைது செய்ம் நடவடிக்கைகளை சீதுவ பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.