பதவி வெற்றிடங்கள்




மட்டக்களப்பு, ஏறாவூரில் புதிதாக அமையப்பெற்றுள்ள கிழக்குப் புற்றுநோயாளா் பராமரிப்பு இல்லத்தில் (EASCCAHOSPICE) பணியாற்றுவதற்காக புதிதாக ஊழியர்களை இணைத்துக் கொள்வதற்கு அந்நிறுவனம் தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
இலவச சேவை வழங்கவுள்ள இந்நிறுவனத்தில் பணியாற்ற பின்வரும் பதவிகளுக்கு தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்க முடியும் எனவும், நேர்முகப் பரீட்சையின் பின்னர் தெரிவாகும் ஊழியர்களுக்கு கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும் எனவும் அந்நிறுவனத்தின் முகாமையாளர் அஷ்ஷெய்க் எஸ்.எம். இர்ஷாத் தெரிவித்தார்.
  1. தாதிய உத்தியோகத்தர்கள் (ஆண் / பெண்)
  2.  பரிசோதகர்கள் அல்லது சுகாதார சேவை உதவியாளர்கள் (ஆண் / பெண்)
  3.  சமையலாளர்
  4.  காவலாளி
  5.  காரியாலய உதவியாளர்
  6.  சுத்தம் செய்யும் ஊழியர்
விண்ணப்பதாரர்கள் பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டிருத்தல் வேண்டும்.
1. 1 ஆம் அல்லது 2 ஆம் பதவிகளுக்கு.. – அரச வைத்தியசாலைகளில் பணி புரிந்து சமகாலத்தில் ஓய்வு பெற்றிருத்தல் அல்லது தனியார் பயிற்சிக் கல்லூரிகளில் கற்று தனியார் வைத்தியசாலைகளில் 05 வருட சேவை அனுபவமுள்ளவராக இருத்தல் வேண்டும்.
2. நோயாளிகளை பராமரிக்கும் பணியில் சிறந்த தேகாரோக்கியம் மற்றும் மனிதநேயம் என்பன உள்ளவராக இருத்தல் வேண்டும்.
3. 30-65 வயதிற்குட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.
4. நோயாளர்களது நலன் பேணும் தன்மை, கடமையுணர்வு மற்றும் பொறுப்புணர்வு என்பன பெற்றவராக இருத்தல் வேண்டும்.
5. நேர்முகப் பரீட்சையின் போது சம்பள அளவுகள் பேசித் தீர்மானிக்கப்படும்.
மேற்படி பதவிகளுக்காக விண்ணப்பிக்க விரும்புவோர், உங்களது சகல விபரங்கள் அடங்கிய சுயவிபரக் கோவையுடன் மேலதிக சான்றிதழ்களின் பிரதிகளையும் எமது காரியாலயத்தில் நேரடியாகவும் அல்லது பின்வரும் மின்னஞ்சல் மற்றும் தபால் முகவரி என்பவற்றின் ஊடாகவும் அனுப்பி வைக்கலாம் எனவும் அந்நிறுவனத்தின் முகாமையாளர் எமது டெய்லி சிலோனிடம் மேலும் குறிப்பிட்டார்.
நேர்முகப் பரீட்சைக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும்.
மேலதிக விபரங்களுக்கு: 076-5343434
விண்ணப்ப முடிவுத் திகதி: 29.10.2018
The Manager,
Eastern Cancer Care Hospice,
Savukkadi Road,
Eravur.