பார்வையிட்டனர்,வயல் நிலங்களை




பொலன்னறுவை மாவட்டத்தின் தம்பாளை மற்றும்  ஓணாகம கிராமங்களுக்கு அருகிலுள்ள சின்னவில் மற்றும் வேரோடை  வயல் நிலங்களை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் மாகாண சபைகள் உள்ளூராட்சி  மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோர், இன்று (21) நேரில் சென்று பார்வையிட்டனர்.
குறித்த நிலங்களை, வன பரிபாலன திணைக்களத்தினர் உரிமை கோரியுள்ள நிலையிலேயே, அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோர் அப்பிரதேசத்துக்குச் சென்று அந்த நிலங்களைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களில் சிலருடன் கலந்துரையாடினர்.