விஷத்தன்மை வாய்ந்த போதைப் பொருட்களை ஒழிக்க விஷேட திட்டம்




ஹெரோயின் உட்பட விஷத்தன்மை வாய்ந்த போதைப் பொருட்கள் தொடர்பில் தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸ் தலைமையகத்தில் விஷேட பிரிவு ஒன்றை நடைமுறைப்படுத்த பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 

பொலிஸ் மா அதிபரின் பூரண மேற்பார்வையின் கீழ் குறித்த விஷேட பிரிவு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மக்களுக்கு எவ்வித அசௌகரியங்களும் இன்றியும் அவர்களின் அடையாளத்ததை வெளிப்படுத்தாத விதமாகவும் தகவல்களை வழங்குவதற்காக சில தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

011-3024840, மற்றும் 011-3024820 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் மூலமாகவும் 011-2430912 என்ற தொலைநகல் இலக்கத்தின் மூலமாகவும் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்க முடியும்.