ஜயசூரியவிற்கு காலக்கெடு




ஐசிசியின் ஒழுங்கு விதிகளை மீறியதாக இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரியவிற்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) குற்றம் சுமத்தியுள்ளது. 

இரண்டு சரத்துக்களை மீறியமைக்கு எதிராக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பில் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதியில் இருந்து 14 நாட்களுக்குள் தனது நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு ஐசிசி தெரிவித்துள்ளது.