புகையிரத்துடன் மோதி மேலும் இரு யானைகள் பலி




கல்ஓய, பலுகஸ்வெவ பகுதியில் புகையிரதத்துடன் யானை ஒன்று மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அத்துடன் குறித்த விபத்தில் புகையிரதமும் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை, கல்கமுவ பகுதியில் புகையிரதத்துடன் யானை ஒன்று மோதி உயிரிழந்துள்ளதாகவும் புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவிக்கின்றது.