( அப்துல்சலாம் யாசீம்)
ஹொரவ்பொத்தானை பொலிஸ் நிலையத்துக்குள் வைத்து கத்திக்குத்துக்கு இலக்கான இருவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் நேற்று மாலை (15) பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்கானவர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் (45 566) இலக்கமுடைய சரத் அமர சூரிய மற்றும் கத்தியால் குத்திகுத்தியவரின் மனைவியான முறகேவ, நானமில்லாவ பகுதியைச் சேர்ந்த நிரோஷா குமாரி (33 வயது) உடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக மனைவி பொலிஸ் அவசர அழைப்பு இலக்கமான 119 இலக்கத்திற்கு தொலைபேசி அழைப்பு விடுத்ததை அடுத்து கணவரை தேடி சென்ற பொலிஸார் கைது செய்தனர்
இதேவேளை கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கணவர் தொடர்பாக வாக்குமூலம் வழங்கச் சென்ற மனைவியை கணவர் முச்சக்கர வண்டியில் இருந்து இறங்கும்போதே பொலிஸ் நிலையத்துக்குள் வைத்து கத்தியால் குத்த முற்பட்டதாகவும், அதனை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட பொலிஸாருக்கும் கத்திக்குத்து இடம்பெற்றதாகவும் தெரியவருகின்றது,
கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸாரும் கத்தியால் குத்தியவரின் மனைவியும் அனுராதபுர போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கத்தியால் குத்திய கணவரை பொலிஸார் கைது செய்து கெப்பிட்டிகொல்லாவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்,
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் மொரகேவ,நானமில்லாவ பகுதியைச் சேர்ந்த நைதாகே ரோஹன விஜயசூரிய (39 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment
Post a Comment