அதேபோல் ஆப்கானிஸ்தானிற்கு எதிரான டெஸ்டிற்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த முகமது ஷமி யோ-யோ டெஸ்ட் தோல்வியால் அணியில் இடம்பெறவில்லை.
இதனால் யோ-யோ டெஸ்ட் மீது முன்னாள் வீரர்கள் விமர்சனங்களை எழுப்பினார்கள். இந்நிலையில் வீரர்கள் தேர்விற்கு முன்பே யோ-யோ டெஸ்ட் நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் இந்திய அணி கேப்டன் முகமது அசாருதீன் அறிவுறுத்தியுள்ளார்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201807041707098472_1_YoYotest-124s._L_styvpf.jpg)
இதுகுறித்து முகமது அசாருதீன் கூறுகையில் ‘‘என்னைப் பொறுத்த வரையில் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்குதான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஐபிஎல் தொடரில் அம்பதி ராயுடு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைத்தது.
ஆனால், அணியில் தேர்வானபின், யோ-யோ டெஸ்டால் அவரது வாய்ப்பு பறிபோகியுள்ளது. அணி தேர்வுக்கு முன் யோ-யோ டெஸ்ட் நடத்தப்பட வேண்டும். தற்போதுள்ள நிலை எல்லோருக்கும் தர்மசங்கடமாக உள்ளது’’ என்றார்.
Post a Comment
Post a Comment