புதிய அமைப்பாளர்கள்




ஹெரவ்பத்தான தேர்தல் தொகுதிக்கான ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளராக மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் வீரகுமார திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். 

அத்துடன் அம்பாறை தேர்தல் தொகுதிக்கான அமைப்பாளராக மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் ஶ்ரீயானி விஜேவிக்கிரமவும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த இருவருக்கும் இன்று (04) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோபூர்வ இல்லத்தில் வைத்து அவர்களுடைய நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை குறித்த இருவரும் குறிப்பிட்ட இரு தேர்தல் தொகுதிகளுக்கான பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத் தலைவர்களாகவும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.