(அப்துல்சலாம் யாசீம்)
கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்திப் பயிற்சி பிரிவின் புதிய கணணிக்கூடத்திறப்பு விழாவும் இலத்திரனியல் பயிற்சி முகாமைத்துவத் தளத்தினை உத்தியோகபூரவமாக அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம தலைமையில் இன்று (05)
கிழக்கு மாகாண முகாமைத்துவ பயிற்சிப் பிரிவில் நடைபெற்றது.
இப்புதிய கணணிக்கூடம் ஐம்பது பயிலுநர்கள் ஒரே தரத்தில் பயிற்சி பெறக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளதோடு உத்தியோகத்தர்கள் சகலரும் இப்பயிற்சி பிரிவுடன் இலகுவாக தொடர்பாடலை மேற்கொள்ளும் வகையில் பயிற்சி முகாமைத்துவ தரவுத்தளமும் அமைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர், திருமதி , ஜே.ஜே.முரளிதரன் மற்றும் கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்திப் பயிற்சி பிரிவின் பணிப்பாளர் , செல்வி எம்.எம். ஹலீடா ஆகியோரின் ஒருங்கிணைப்பில் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் கிழக்கு மாகாண செயலாளர்கள் ,பிரதிப்பிரதம செயலாளர்கள் , திணைக்களத் தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment