வவுனியா நகரசபையில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கோரப்படும் தகவல்களுக்கு உரிய காலப்பகுதியில் பதில் வழங்கப்படுவதில்லையென, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா நகரசபையின் செயற்பாடுகள் மற்றும் நகரசபைக்குட்பட்ட சில விடயங்கள் தொடர்பில், தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் விண்ணப்பங்கள் வழங்கிய போதும், நகசபையினர் அவற்றுக்குரிய பதில்களை உரிய காலப் பகுதிக்குள் வழங்காது, கால இழுத்தடிப்புக்களை செய்து வருவதாக, குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, அண்மையில் வவுனியா நகரசபை உறுப்பினர் ரி.கே.இராஜலிங்கம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நகரசபையிடம் கோரிய விடயங்களுக்கு உரிய பதில் வழங்கப்படவில்லைனெ, அண்மையில் நடைபெற்ற சபை அமர்வில் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment