இன்று (08) காலை பொலிஅத்த பகுதியில் உள்ள தனியார் வகுப்பொன்றின் கூரை உடைந்து விழுந்ததில் வகுப்பில் கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
16 மற்றும் 15 வயதுடைய மாணவ, மாணவிகளே இவ்வாறு காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஅத்த பொலிஸ் நிலையத்திற்கு முன்னாள் உள்ள 4 மாடி கட்டிடத்தின் 4 ஆவது மாடியில் குறித்த வகுப்பு நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பிரதேசத்தில் மழையுடன் வீசிய பலத்த காற்றின் காரணமாக இவ்வாறு கூரை உடைந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கூரை உடைந்து விழும் சந்தர்ப்பத்தில் குறித்த வகுப்பில் சுமார் 750 மாணவர்கள் இருந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஒரு மாணவன் தங்கல்ல வை்ததியசாலையிலும் ஏனைய ஆறு பேரும் பொலிஅத்த வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த கட்டிடத்திற்கு அருகில் இருந்த வியாபார நிலையங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
16 மற்றும் 15 வயதுடைய மாணவ, மாணவிகளே இவ்வாறு காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஅத்த பொலிஸ் நிலையத்திற்கு முன்னாள் உள்ள 4 மாடி கட்டிடத்தின் 4 ஆவது மாடியில் குறித்த வகுப்பு நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பிரதேசத்தில் மழையுடன் வீசிய பலத்த காற்றின் காரணமாக இவ்வாறு கூரை உடைந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கூரை உடைந்து விழும் சந்தர்ப்பத்தில் குறித்த வகுப்பில் சுமார் 750 மாணவர்கள் இருந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஒரு மாணவன் தங்கல்ல வை்ததியசாலையிலும் ஏனைய ஆறு பேரும் பொலிஅத்த வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த கட்டிடத்திற்கு அருகில் இருந்த வியாபார நிலையங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment
Post a Comment