ஹிக்கடுவ, வெரல்லன பிரதேசத்தில் காலி - கொழும்பு பிரதான வீதியில் தற்போது போக்குவரத்து தடைப்பட்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
அந்தப் பிரதேசத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதன் காரணமாகவே போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் 07 பேர் கடலுக்கு சென்று காணாமல் போயுள்ள நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
ஆழ்கடல் மீன்பிடிக்கு செல்லும் மீனவர்களுடன் கரையில் இருப்பவர்கள் தொடர்பை ஏற்படுத்துவதற்கான ராடர் கருவியை இயக்குவதற்கு படகு உரிமையாளர்களிடம் மாதாந்தம் 3000 ரூபா அறவிடப்பட்ட போதிலும், அரசாங்கத்தால் அந்தக் கருவி இயக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே ஆர்ப்பாட்டம் இடம்பெறுகின்றது.
அந்தக் கருவியை இயக்கினால் காணாமல் போயுள்ள மீனவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கலாம் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
Post a Comment
Post a Comment