தேனீரின் விலை குறைப்பு




தேனீர் ஒன்றின் விலையை 5 ரூபாவால் குறைக்க சிற்றூண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர். 

சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்ட காரணத்தால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

அதனடிப்படையில் இன்று (01) முதல் இந்த விலை குறைப்பு அமுலுக்கு வரும் என குறித்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். 

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

சமையல் எரிவாயுவின் விலை குறைத்தமை தொடர்பில் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் மரக்கறிகளின் விலையை குறைத்தால் உணவு பொதிகளின் விலையை 10 ரூபாவால் குறைப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.